பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேம்மாங்கு கூடி இருந்த இடம்-குட்டி கும்மாளம் போட்ட இடம் வாழைப்பழம் கின்ற இடம்-குட்டி பாழாய்க் கிடக்குதடி, நடையிலே பல்விளக்கிக்-குட்டி நாணயமாப் போறபொண்ணே இடையிலுனக்கு வாழ்வுவந்தால்-குட்டி என்னே மதிப்பாயோடி? நல்லதல்ல பில்லேக்காளே-மாமா நயனமுள்ள கொம்புக்காளே கொம்புக்காளேயை வித்துட்டாலும்-நீ குமரிகொள்ளப் போறதில்லை, சந்தையிலே மருக்கொழுந்து-குட்டி சாசமாத்தான் விற்குதடி கையிலொரு காசும் இல்லை-குட்டி கடன்கொடுப்பார் ஆரும் இல்லை. ஆலம் விழுதுபோலே-குட்டி அந்தப்பிள்ளே தலைமயிரை ஆளுஒண்னும் பார்க்காமல்தான்-குட்டி ஆக்துருளாம் ஆத்துக்குள்ளே. தெற்கத்தி அண்ணன்மர்ரே-அப்பா திருநெல்வேலித் தம்பிமாரே என்புருசன் வண்டியைத்தான்-நீங்கள் எதிர்க்கவரக் கண்டீங்களா?. நெத்திக்குச் சுட்டிகட்டி-மாமா நேர்விழிக்கு மையெழுதிக் கள்ள நடைகடக்கும்-அந்த்க் 28 29 30 31 32 33 84