பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு கண்டாங்கிச் சிலைக்காரி கைரெண்டும் வ8ளயல்காரி கண்டால் வரச்சொல்லுங்கோ ரெண்டாம்நம்பர்த் தோட்டத்துக்கு. ஆலம் விழுதுபோலே அந்தப்புள்ளே தலைமயிரு தாக்கி முடிஞ்சிட்டாளாம் - தூக்கணத்தாங் கூடுபோலே. கானகக் கரிசலிலே களேயெடுக்கும் பொண்மயிலே நீலக் கருங்குயிலே கிற்கட்டுமா போகட்டுமா ? பாக்குத் துவர்க்குதடி பழையஉறவு மங்குதடி போட்டால் சிவக்குதில்லை பொன்மயிலே உன் மயக்கம். கச்சேரி கண்டபிள்ளை கையெழுத்து வச்சபிள்ளை போலீசைக் கண்டபிள்ளே போதுமடி உன் உறவு. கறுத்தபிள்ளே முழிசுருட்டிக் - கதவைஏண்டி திறந்துபோட்டாய் கறுத்தகாய் பூந்துக்கிட்டு இழுத்துதடி அப்பன்சோற்றை, f . . . - மண்வெட்டி தோளில்வச்சு மண்வெட்டப் போறவனே மண்ணுத்தாக்க நானும்வாறேன் மன்னுஎன்னேக் கூட்டிப்போடா. 27 168 170 171 179 178 | 174