பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணப் பட்டு கலியாணமே ஒரு கலியாணமே - மனசில் களிப்பூறும் கலியாணமே சலியாத சந்தோசச் கலியாணமே - ரொம்பக் சனங்கள் கூடும் கலியாணமே, வருசம்மாசம் தேதிநாள் கிழமை - நல்ல புருசன் பெண்ணுக்கும் பொருத்தமாமே கோடிசனம் வந்து பந்தலிலே - நல்ல - குருவோடு சேர்ந்து உட்கார்ந்தாங்களே. வந்த பூக்களெல்லாம் தாராளமே - பன்னிர் சக்தனம் தேங்காயும் தாராளமே நாகசுரமும் புல்லாங்குழலும் சல்ல மேளமும் கொட்டும் பிளக்குதுபார். கப்பல் மோட்டார் கட்டைவண்டியிலே சனம் கும்புகும்பாக வாருங்களே பார் மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டிக் கொஞ்சம் பாலும் பழமும் அவளுக்கூட்டி. عصمستعمب------ பரிகாசப் பாட்டு (கொழுந்தியாள் மாப்பிள்ளையைக் கேலிபண்ணுவது.) வாங்க வாங்க அத்தானே வர்ணச் சட்டையும் போட்டு தேங்காத் தலையும் வச்சுத் தெருவிலே அலேஞ்சவரே. கலியாணம் இல்லேண்ணு கவலேயா இருந்தீங்கனே காலியாப் போகுமுண்ணு சலங்கிக்கிட்டிருந்தீங்களே. 4.