பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலம் பல் - ஒப்பாரி கொத்துமல்லி பூப்பூக்க - என்னப்பெற்ற அம்மா கொடிகொடியாக் காய்காய்க்கக் r கோமுட்டி பெற்றபெண்ணு - என்னேப்பெற்ற அம்மா குழந்தையிலே அறுக்கிறேனே ! l வெங்காயம் பூப்பூக்க - என்னைப்பெற்ற அம்மா வரிவரியாக் காய்காய்க்க வாணிச்சி பெற்றபெண்ணு என்னைப்பெற்ற அம்மா வயசிலே அறுக்கிறேனே ! 2 மதுரையிலே கூடாரம் - என்னைப்பெற்ற அம்மா மல்லிகைப்பூ வியாபாரம் மல்லிகைப்பூக் கேட்கப்போனல் - என்ன ப்பெற்ற அம்மா மாத்துக்கொண்னு கொடுப்பாரே ! 3 சந்தையிலே கூடாரம் - என்னைப்பெற்ற அம்மா சாமந்திப்பூ வியாபாரம் சீதைபோய்ப் பூக்கேட்டால் - என்னைப்பெற்ற அம்மா செடிக்குஒண்னு கொடுப்பாரே ! 4. மலைமேலே மாடுமேயும் - என்ன்ேப்பெற்ற அம்மா மணிக்குழாய் ஊதிவரும் மணிக்குழாய்ச் சத்தங்கேட்டு - என்னே ப்பெற்ற அம்மா மங்கை புலம்புறேனே ! 5 செடியோரம் மாடுமேயும் . என்னேப்பெற்ற அம்மா சீமைக்குழாய் ஊதிவரும் - சீதை புலம்புறது . என்னேப்பெற்ற அம்மா சீமைக்கெல்லாம் கேக்கலேயோ ! 6 பத்துப் பவுன்வாங்கி என்னேப்பெற்ற அம்மா பர்த்தாவுக்குக் காப்படித்துப் ‘. . . . . பத்தாருத் தட்டார்வக்க - என்னேப்பெற்ற அம்மா பர்த்தாளங்கேண்ணு கேட்டார்களே !