பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துமாரி ஆதியிலே அமைந்த சக்தி

  • எங்கள்முத்து மாரி - அம்மா ஆள்கிருரளாம் பூழி யெல்லாம் சிங்கத்துமேல் ஏறி.

அடுத்தால் சமயபுரம் எங்கள் முத்து மாரி - அம்மா ஆதிசிவன் பெண் சாதியாம் சிங்கத்துமேல் ஏறி. கன்னபுரம் வந்திருப்பாள் எங்கள் முத்து மாரி - அம்மா புன்னே நல்லூர் வந்திருப்பாள் சிங்கத்துமேல் ஏறி. கஞ்சா ஆரு ராசாவுக்கு எங்கள் முத்து மாரி - அம்மா சஞ்சலத்தைத் தீர்த்தவளாம் சிங்கத்துமேல் ஏறி. கார்த்த மலையி லேயிருப்பாள் எங்கள் முத்து மாரி - அம்மா நாராயணன் தங்கச்சியாள் சிங்கத்துமேல் ஏறி. வீராம்பட்டணம் வந்திருப்பாள் எங்கள் முத்து மாரி - அம்மா விரரெல்லாம் கொன்றவளாம் சிங்கத்துமேல் ஏறி. தாராபுரம் வந்திருப்பாள். எங்கள் முத்து மாரி அம்மா இராப்பிணி இர்ப்பவளாம் சிங்கத்துமேல் ஏறி.