பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மலை அருவி கும்மி பாடிக் குப்பம் வருவாள் எங்கள் முத்து மார் - அம்மா கொலுவிருந்து காப்பவளாம் சிங்கத்துமேல் ஏறி. தில்லைநகர்க் காளியம்மா எங்கள் முத்து மாரி - அம்மா பிள்ளைவரம் தந்தவளாம் சிங்கத்துமேல் ஏறி, நாச்சியார் கோவில் வந்திருப்பாள் எங்கள் முத்து மாரி - அம்மா ஆச்சரிய மாவருவாள் சிங்கத்துமேல் ஏறி. ஒழுக மங்கலம் வந்திருப்பாள் எங்கள் முத்து மாரி - அம்மா பழுதில்லாமே காப்பவளாம் சிங்கத்துமேல் ஏறி. கனியாக் குறிச்சி வடிவழகி எங்கள் முத்து மாரி - அம்மா தனிவழியா வாறவளாம் சிங்கத்துமேல் ஏறி. நல்லகாகப் பட்டணம் வருவாள் எங்கள் முத்து மாரி - அம்மா நெல்லுக்கடை மாரியம்மா சிங்கத்துமேல் ஏறி. கிரந்த குடிவருவாள் எங்கள் முத்து மாரி அம்மா கோரிக்கைக்கு வரக்கருவாள் சிங்கத்துமேல் ஏறி. நீராவினை எல்லாங் தீர்ப்பாள் எங்கள் முத்து மாரி - அம்மா . . . தேசமெல்லாத் தையுங்காப்பாள் சிங்கத்துமேல் ஏறி. 10 11 12 13 14 15