பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் நாலுநாளாய்க் கல்லறைக்குள்ளே - சின்னப்பாலகா நாற்றப்பிணம் இருக்கையிலே - சின்னப்பாலகா நாற்றத்தைச் சகித்துரீ - சின்னப்பாலகா நாடி.அங்கே போகலேயா - சின்னப்பாலகா. கல்லறையைப் பார்த்துநீ சின்னப்பாலகா கண்ணிர்விட் டழுகலையோ - சின்னப்பாலகா. கல்லையும் புரட்டச்சொல்லிச் - சின்னப்பாலகா கத்தலேயா சத்தம்போட்டுச் - சின்னப்பாலகா. வாஅப்பா லாசருவேயென்று - சின்னப்பாலகா வற்புறுத்திச் சொல்லலேயா - சின்னப்பாலகா. கல்புரட்டச் சொன்னுற்போலே-சின்னப்பாலகா கட்டவிழ்க்கச் சொல்லலேயா - சின்னப்பாலகா. வந்தானே லாசருவும் - சின்னப்பாலகா வழக்கம்போல முகத்தைவச்சு - சின்னப்பாலகா தந்தானே தோத்திரங்தான் - சின்னப்பாலகா தருமமான உன்செய்கைக்குச் - சின்னப்பாலகா கல்புரட்டின ஆளுகளும் சின்னப்பாலகா கட்டவிழ்த்த ஆளுகளும் சின்னப்பாலகா அந்தநாள் அதிசயத்தைச் - சின்னப்பாலகா எந்தநாளும் பார்க்கலேயாம் . சின்னப்பாலகா. கொஞ்சக்காலம் என்ருலும் - சின்னப்பாலகா குறையலேஉன் அற்புதங்கள் - சின்னப்பாலகா. மனிசனரீ பிறந்திருந்தும் - சின்னப்பாலகா மறையலேஉன் அற்புதங்கள் - சின்னப்பாலகா. ராசாவாப் பிறந்திருந்தும் - சின்னப்பாலகா ாாசாவுக்கு அேடங்கிச் - சின்னப்பாலகா 331 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103