பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 1. தெம்மாங்கு இந்தப் புத்தகத்தில் முதலில் தெம்மாங்கு என்ற பகுதி இருக் கிறது. தெம்மாங்குக்கு ஒரே ஒரு மெட்டுத்தான் உண்டு; ஆன லும் அதைப் பலவாறு தாளத்தை மாற்றிப்பாடுவதுண்டு. இப் பகுதியில் ஆணின் கூற்ருகவும் பெண்ணின் கூற்ருகவும் 306 கண்ணிகள் இருக்கின்றன. இந்தக் கண்ணிகளில் பொருள் தொடர்பு ஏதும் இல்லை. பல பல கிலேயிலே உள்ள ஆண்களும் பெண்களும் பாடும் முறையிலே துண்டு துண்டாக அமைந்தவை இவை. தன்னுடைய மாமனிடத்தில் காதல் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவனே மணக்க வேண்டுமென்ற ஆசையில் தன்ன அழகுபடுத்திக் கொண்டாள். தன் கூந்தலை மிகவும் பாதுகாப் பாக வளர்த்துக் கொண்டை போட்டு அழகு பார்த்தாள். அவள் காதல் வளர்ந்தது; கூந்தல் வளர்ந்தது; அழகும் வளர்ந்தது. ஆனல் விதி அவளுக்கும் அவள் மாமனுக்கும் குறுக்கே கின்றது. யாரோ ஒரு சோம்பேறிப் பயலுக்கு அவள் தன் கழுத்தை நீட்டும்படி ஆகி விட்டது. அவள் உள்ளம் மறுகினள். சோருக்கும் இயந்திர மாக அவனிடம் தன் வாழ்நாள் முழுவதும் இருக்கும்படி முடிந் ததை எண்ணி எண்ணி ஏங்குகிருள். ஒருநாள் அவள் மாமன் வருகிருன். அவன் உலகியலின்படி, "செளக்கியமாக இருக்கிருயா?" என்று கேட்கிருன், அப்போது அருகில் ஒருவரும் இல்லை. . . ... ." செளக்கியமா! அவளுக்குத் துயரம் பொங்கி வருகிறது. வெடித்துக்கொண்டு வருகிறது உணர்ச்சி. - - ஆசைக்கு மயிர்வளர்த்துமா - அழகுக்கொரு கொண்டை போட்டுச் சோம்பேறிப் பயலுக்குதான்.மாமா சோருக்க ஆளானேனே.. 1. பக்கம், 3 : 6, - - : .*