பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆராய்ச்சி உரை ஆறு சக்கரம் நூறுவண்டி-குட்டி அழகான ரெயிலு வண்டி மாடுகண் ணு இல்லாமல்தான்.குட்டி மாயமாத்தான் ஓடுதடி.' இதைப் பாடியவன் மதுரைப் பக்கத்துக்காரன் என்பது தெளிவாகிறதல்லவா ? கூந்தலுக்கு இலக்கியங்களில் வரும் உவமைகள் பல உண்டு. தெம்மாங்குக்காரன் தான் போகும் சாலேயிலே பார்த்த பொருளே உவமை கூறுகிருன், ஆலம் விழுதுபோலே-குட்டி அந்தப் பிள்ளை தலைமயிரை ஆளு ஒண்னும் பார்க்காமல்தான்-குட்டி ஆத்துருளாம் ஆத்துக்குள்ளே." ஆலம் விழுதுபோல் இருந்த நெடுங் கூந்தலைச் சுருட்டி முடிந்து கொள்கிருள் அந்தப் பெண். அந்த முடிச்சுக்கும் ஓர் உவமை சொல்கிருன் அவன், அவனுக்கே உரிய முறையில்; ஆம்; அவன் சொல்லும் உவமையை எந்த இலக்கியப் புலவரும் சொல்லவில்லை. ஆலம் விழுது போலே - அந்தப் புள்ளே தலைமயிரு தூக்கி முடிஞ்சிட்டாளாம் - - துரக்கணத்தாங் கூடுபோலே." - இந்தத் தெம்மாங்குப் பாடல்கள் மதுரைப் பக்கத்தில் வழங்கி யவை என்பதற்கு வேருெரு சான்றும் கிடைக்கிறது. - கான மயிலேஉன்னேக்குட்டி கைவிடுவ தில்லையென்று மீனுட்சி கோயிலிலே-குட்டி வேட்டிபோட்டுத் தாண்டித் தாரேன்." இந்தப் பாடல்களைப் பாடிய காலத்தில் ஈரோடு சாயச்சேலைக் குப் பேர் பெற்றிருந்ததென்று தெரிகிறது. புடைவை எவ்வளவு நீளமாக இருந்தாலும் போதவில்லையென்று சொல்லுவது அந்தக் காலத்துப் பெண்களுக்கு இயல்பென்ற இரகசியமும் பின்வரும் தெம்மாங்கினல் புலனுகிறது. - 1. v. 5:15. 3. L. 27 : 169. 2. ப. 7 :32, 4, ப. 12 : 67.