பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கரத்தினமே ! 3?' இதே சுவை யமைய, ஒரு கிழவி குமரியாகக் காட்டிக் கொள் வதையும் மற்ருெரு பாட்டுச் சொல்கிறது: நாழிஎண்ணெய் தேச்சிட்டாலும் நயனக்கொண்டை போட்டுட்டாலும் குலுக்கி நடந்திட்டாலும் குமரியாக மாட்டாய் நீ. 2. தங்கரத்தினமே! இதில் உள்ள இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பாட்டிலும் தங்கரத்தினமே என்ற விளி வருகிறது. 37 பாடல்கள் அடங்கிய பகுதி இது. முதலில் தினைக் கொல்லேயில் ஒரு பெண்ணே ஓர் ஆட வன் கண்டு பேசுவதாக வரும் கண்ணிகள் இருக்கின்றன. தினே விதைத்து மகளிரைக் காவல் வைக்கும் வழக்கத்தைச் சில பாடல் கள் சொல்கின்றன. - . தினேக் கதிரைப் பாறையின்மேல் கொட்டி அதைத் தன் காலினல் மிதித்துத் துகைக்கும் வழக்கத்தை வள்ளியின்மேல் ஏற் றிச் சொல்கிறது ஒரு பாட்டு. வட்ட வட்டப் பாறை தேடிக் கொட்டி குளாம் அடிக்கதிரை மோதிரக் காலி ளுலே.தங்க ரத்தினமே மொரமொ ரண்ணு மிதித்தாள் வள்ளி -பொன்னு ரத்தினமே!’ தேனும் தினை மாவும் பிசைந்து வாழையிலையில் அவள் வாரும் அழகையும் காணலாம். - கொச்சிமலைத் தேனெடுத்துக் கூசாமே மாப்பிசைந்து வாழையிலை முறமுஞ்செஞ்சு-தங்கரத்தினமே வாருருளாம் தினமாவைத்தான்.பொன்னு ரத்தினமே..? அந்தக் காலத்தில் ரங்கூன், சிங்கப்பூர் கண்டி முதலிய இடங் களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பல ஆண்களும் பெண்களும் போய் வேலை செய்து பிழைத்தார்கள். அப்படிப் போகும் மோகம் பலருக்கு இருந்தது. தம்முடைய சொந்த ஊரை விட்டுப் போவ தில் என்ன லாபம்' என்ற எண்ணமுடையவர்களும் இல்லாமற் 1. ப. 26 161. 2. ப. 86 :11, 3, ப. 37:13, . -