பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:40 ஆராய்ச்சி உரை பம்பாய்ச் சோப்பு வேணும்-என் திலகமச்சானே - பயாஸ்கோப்பு ராவுக்கே வேணும்.எங்குலக மச்சானே!" என்ற பாட்டிலிருந்து இவர்கள் நாகரிகம் முற்றின காலத்தில் தோன்றின. இணையென்று தெரிந்து கொள்ளலாம். அடுத்தபடி, ஒடும் ஜோடி வருகிறது. மணம் செய்துகொண்ட ஒருத்தியை வேறு ஒர் ஆடவன் தன்னுடன் ரங்கூனுக்கு ஓடிவந்து விடச் சொல்கிருன். அவள் தன் ஐயங்களெல்லாம் சொல்ல, அவன் தெளிவிக்கிருன். கடைசியில் அவள் சம்மதிக்கிருள். இங் கிலாந்து தேசத்துக்கே போவோம் என்கிருள்! இச்சைக் கிசைந்தசிறு இன்பமுள்ள தங்கமாமா இச்சணமே புறப்படலாம் இங்கிலாந்து தேசத்துக்கு." - காளைமாட்டைத் தேடிக்கொண்டு ஒரு மங்கை வர அவளே நாடி வந்த ஆடவன் அவளோடு உரையாடுகிருன். வாதம் விகழ் கிறது. காளைமாடு என்னும் தலைப்பிலுள்ள பிரிவில் இந்தக் காட்சி யைக் காணலாம். அடுத்தபடி தாசியின் காதல் என்ற பிரிவு உள்ளது. ஒரு தாசி ஒருவனே நச்சுவதும், இருவரும் வாக்குவாதம் செய்வதும், அவன் பிறகு அவளைத் தேடிச் செல்வதும், இருவரும் சக்தித்துக் கூடுவது மாகிய நிகழ்ச்சிகளைக் காட்டும் பாடல்கள் அதில் வருகின்றன. பின்வரும் சண்டைப் பேச்சில் வார்த்தைச் சண்டை வளர்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏசியும் துாற்றியும் வைதும் உரப்புகிருர்கள். பின்பு சமாதானப்பேச்சும் வருகிறது. சமாதான மாகப் பேசிய பின் தாங்கள் இன்ன இன்னபடி திருமணத்தை நடத்த வேண்டும் என்று பேசிக் கொள்கிருர்கள். இங்கே கல்யா ணத்துக்கு முன்னும் கல்யாணத்தின் போதும் நிகழும் பல வழக்க மான செயல்களைக் காணலாம். - - - மாமன் பல ஊர்களுக்கு வருகிருயா என்று தங்கம் தைய லாளே அழைக்க, அவள் அங்கெல்லாம் வரமாட்டேன் என்று சொல்கிருள். இப்படிச் சில பாடல்கள் உள்ளன. மலையின்மேல் தேயிலைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்தால் அங்கே கூலி முதலியவை கிடைக்குமென்று அவன் கூற, அவள் தனக்கு வேண் டாம் என்று மறுக்கிருள். - - 1, 2,69: 5 2. ப. 74 22.