பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் தர்க்கம் 39 அரண்மனைக்காரி ஒருத்தியின் வளவாழ்வையும் வண்மையை யும் பற்றிய பாடல்கள் பின்பு உள்ளன. அவள் பல்லாக்கின் மேலும் ஆனேயின் மேலும் போகிருள். ஆடையும் அணியும் அணி கிருள். தர்மம் செய்கிருள். இறுதியில் சல்லிக்கட்டு வருணனே வருகிறது. காளையெல் லாம் சாயம் பூசிக் கருத்தாய் கிற்கின்றன. கொம்புகள் ரம்பம் போல் உள்ளன. அவை ஒடுகின்றன. ஆட்கள் பிடிக்கிருர்கள். 4. ஆண் பெண் தர்க்கம் ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் எதிரெதிரே பேசும் பேச்சைத் தர்க்கம் என்று சொல்வது தெருக் கூத்து மரபு. இந்த நான்காவது பகுதியில் பலவகையான உரையாடல்கள் வருகின்றன. முதலில் ஒராடவன் தான் விரும்பிய பெண்ணே அணுகித் தஞ்சமென்று அடைவதும், அவள் மிஞ்சிப் பேசுவதுமாகிய காட்சி யைக் காணலாம். அவன், அன்னமே பொன்னம்மா கண்ணிரண்டும் சோருதடி அன்னமே.ஏ.ஏ என்பதை ஒவ்வொரு தடவையும் விடாமல் சொல்கிருன். அவளோ அதற்கெதிர் ஒவ்வொரு முறையும், வாது செய்யாதேடா வந்தவழி போய்ச்சேரடா என்று சொல்கிருள். - பின்னலே வரும் வார்த்தைச் சண்ட்ை என்ற பிரிவு முழுவதி லும் கீழ்த்தரமான பேச்சைப் பார்க்கிருேம். இங்கே பல வசவுகளை ஆணும் பெண்ணும் பொழிகிருர்கள். கண்ணுட்டியும் மச்சானும் என்னும் பிரிவில் ஆடவன் பெண்ணே, "என் ஆசைக் கண்ணுட்டி, என் நேசக் கண்ணுட்டி' என்று விளித் துப் பேசுகிருன். அந்தப் பெண் அவனே, "என் திலக மச்சானே, எங் குலக மச்சானே!' என்று அழைக்கிருள். அவள் இது வேண் டும், அது வேண்டும் என்று கேட்க அவன் அவற்றை வாங்கித் தருவதாகச் சொல்கிருன். - சம்பங்கி எண்ணெய் வேணும் சைனுப்பட்டுச் சிலவேனும் 1. L. 53: 4, .