பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஆராய்ச்சி உரை பின்பு வரும் ஒட்ப் பாட்டு மலைக்காட்டில் வேலை செய்யும் பெண். கள் தம்முடைய வேலையைப் பற்றிப் பாடும் வகையில் அமைந்திருக் கிறது. காட்டுக்குள் பல விலங்குகள் இருக்கின்றன. அங்கே உள்ள தோட்டத்தில் கூழ் குடித்துவிட்டு வேலை செய்யப் புறப் படுகிருர்கள் கூலியாட்கள். கங்காணியும் கணக்குப் பிள்ளேயும் இருக்கிருர்கள். மழையானலும் களை எடுக்க வேண்டும். பால் குடிக்கிற பச்சைப்பிள்ளே பாலுக்கழுதாலும் பறந்து களை எடுக்க வேண்டும். பழம் பறிக்கிருர்கள் பெண்கள். பெரிய ரைட்டர் வந்து அவர்களே வெருட்டுவான். கங்காணிக்குத் தலைக்காசு கொடுக்க வேண்டும். இல்லையானல் அவன் கூச்சல் போட்டுக் குதிப்பான். வெண்ணிட் என்னும் துரை வருகிருர். அவர் கங் காணிமாருக்குக் காசு கொடுக்கிருர். நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கிருர். இந்தத் தொடருக்குப் பின் தோட்டவேலை சம்பந்தமாகத் தொடர்பில்லாத கண்ணிகள் இருக்கின்றன. ரைட்டரை ரைட் டன் என்று சொல்கிருள் பாட்டுப் பாடும் பெண் ! ரயிட்டன் வந்து-ஏலேலோ.லயிட்டுப்போட்டு-ஐலசா சயிட்ட டிப்பான்-ஏலேலோ-நயிட்டிலேதான்-ஐலசா.: என்பதில் ஆங்கிலமும் தமிழும் கலந்த அவியலைப் பார்க்கிருேம். 6. கள்ளன் பாட்டு நாடகத்தில் கள்ளன் வேடம் போடுகிறவனேக் கண்டு ஆர வாரம் செய்து கிராம மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் திருடன் பாட்டு, கள்ளன் பாட்டு என்று பல பாட்டுக்கள் அங்கங்கே வழங்கின. இந்தப் பகுதியில் முதலில் ஒரு திருடன் தன் பெருமைகளைச் சொல்லிக் கொள்வதாக ஆறு பாடல்கள் இருக்கின்றன. அவன் அந்தமான் மலையிலே பிறந்தவனும்; ஆயிரம் மெடல் பெற்றவனம். காலேயிலே எழுந்திரிச்சுக் கைகாலைச் சுத்தம் பண்ணிக் கால்படி கள்ளுக் குடிக்காமல் இருக்கிறவன் - கழுதைக்குச் சமானம்!" என்பது அவனுடைய சித்தாந்தம். 1. ப. 168 : 27, 飞Tā莒工厂 2. ப. 169:39, 40, 4, ц. 175 : 6.