பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் பாட்டு 45 ஜம்புலிங்கம் என்ற கொள்ளேக்காரன் திருநெல்வேலிச் சீமை யிலே முப்பது காற்பது ஆண்டுகளுக்கு முன்னலே இருந்தான். அவன் பணக்காரர்களேக் கொள்ளேயடித்து ஏழைகளுக்கு உப காரம் செய்தவன். அதல்ை ஏழைகளுக்கெல்லாம் அவனிடம் பரிவு இருந்தது. அவனுடைய சாகசச் செயல்களே வியப்புடன் கதை கதையாகச் சொல்லிக் கொண்டார்கள். அவனேப் பிடிக்கப் போலீஸ்காரர்கள் பலபடியாக முயன்றும் அவன் அகப்படவில்லை. அவனுக்கு ஒரு காமக் கிழத்தி யிருந்தாள். அவள் செய்த வஞ்ச கத்தால் கடைசியில் ஜம்புவிங்கம் அகப்பட்டுக் கொண்டான். அவள் போலீஸ்காரருக்கு அவனேக் காட்டிக் கொடுத்து விட்டாள். அந்தக் காலத்தில் பத்திரிகைகளில் நாள்தோறும் ஜம்புவிங் கத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணமாக இருந்தன. மக்கள் ஆர்வத்தோடு அவற்றைப் படித்தார்கள். ஐம்புலிங்கத்தின் வரலாற்றைப் புத்தகமாக ஒருவர் எழுதி னர். அவனேப் பற்றிப் பல பாடல்கள் எழுந்தன. அவற்றில் ஒரு தொடரே இங்கே 57 பாடல்களாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், - வாரார் சொக்கத் தங்கம்.நம்ம நாடார் ஜம்பு லிங்கம் என்ற இரண்டடிகள் வருகின்றன. கடைசியில் இரண்டு பாட் டுக்களில் மாத்திரம் அவை இல்லை; அங்கே வேறு இரண்டடிகள் வருகின்றன. - - . . . . ஜம்புலிங்கத்தைச் சிறந்த வீரனுகவும் தர்மவாளுகவும் சித்தி ரிக்கிறது இந்தப் பாடல். அவனுக்கு மலையாளம், செந்தமிழ் இரண்டும் தெரியுமாம். எம்.ஏ., பி.ஏ. படித்து இங்கிலிஷ-ம் பேசு வானம். ஆளிலே அழகன், ஆசாரபோசன், தோள்கள் பருத்த மன்னன். முறுக்கிவிட்ட மீசையும் முன்னம் பல் வரிசையும் மினுக்கி வைத்த கத்தியும் கையில் வெடிகளுமாகக் காட்சி அளிப் பான். தன் வீட்டையும் தாய் பிள்ளைகளையும் விட்டு விட்டுத் தைரியமாகத் தர்மம் செய்ய வேண்டுமென்றே இந்தத் தொழிலை மேற்கொண்டாளும்! ベ 、 。 - அவனுக்கு அத்தை மகள் ஒருத்தி இருந்தாள். அவளைச் சட்டை பண்ணுமல் அங்கியப் பெண்களின் மேல் ஆசை வைத்துப் போனதால் மோசம் வந்தது. . . . .