பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை சில காலமாகத் தமிழ் நாடோடிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி தமிழ் காட்டில் ஓங்கி வருகிறது. வானெலியில் அடுத் தடுத்து நாடோடிப் பாடல்களைப் பாடி வருகிருர்கள். நான் பல காலமாக நாடோடிப் பாடல்களேத் தொகுத்து வருகிறேன். அவற் றின் சம்பந்தமாக 5ான்கு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் சென்னேமாகாணத்தில் கலெக்ட ராக இருந்த பூ பர்ஸி மாக்வீன் என்னும் ஆங்கிலேயர் தமிழ் காடோடிப் பாடல்களைத் தொகுக்கத் தொடங்கினர். ஒரு வரிக்கு இத்தனை அணு என்று பணம் கொடுத்துப் பலரிடம் பெற்ருர். பெரும்பாலும் மலைப் பகுதிகளில் உள்ள தோட்டத் தொழிலாளி களிடத்தும், கிறிஸ்தவர்களிடத்தும் இந்தப் பாடல்களைச் சேகரித் திருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. இவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சில பத்திரிகைகளில் அவர் வெளியிட்டிருக்கிருர். பின்பு இவற்றைச் சென்னைப் பல்கலைக் கழக நூல் கிலேயத்துக்கு வழங்கினர். அவை நூல் கிலேயத் தலைவரின் பாதுகாப்பில் இருந்தன. தஞ்சைச் சரஸ் வதி மகால் கிர்வாகிகள் அவற்றைப் புத்தக உருவத்தில் வெளியிட எண்ணி, பதிப்பிக்கும் வேலையை என்னிடம் விட்டார்கள், இத் துறையில் பல காலம் ஈடுபட்டவளுதலின் இப் பணியை மகிழ்ச்சி யுடன் ஏற்றுக் கொண்டேன். பலவாருக இருந்த பாடல்களே ஒருவாறு வகைப்படுத்தி இந்த உருவத்தில் அவற்றைப் பதிப்பித்தேன். இடக்கராக இருந்த பல பாடல்களே விட்டுவிட்டேன். இயற்கைச் சூழ்நிலையில் கட்டுப்பாடின்றி உணர்ச்சி வசப் பட்ட மக்கள் பாடும் பாடல்கள் ஆதலின் இவற்றைக் காட்டு மலருக்கும், மலேயருவிக்கும் ஒப்பிடலாம். மலேயருவி என்ற பெயர் உருவக வகையால் இந்தத் தொகுதிக்குப் பொருத்தமாக இருக்குமென்று எண்ணி அதனே அமைத்தேன். இப்பணியில் என்னே ஈடுபடச் செய்த தஞ்சைச் சரஸ்வதி மகால் நூல் கிலேய கிர்வாகிகளுக்கு என் நன்றி உரியது. கி.வா. ஜகந்நாதன் 58 سه-16