இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தை:"சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி சொல்லுவாய் எட்டுத் திசையிலும் என்னென்ன சேதி எனக்குச்சொல்லுவாய்" குருவி: "பட்டுக் குழந்தை பட்டுக் குழந்தை பாட்டுப் பாடுவோம் கெட்ட கவலைகள் கிட்ட வராது பாட்டுப் பாடுவோம்" குழந்தை:"பாட்டு வேண்டாம் கதையைச் சொல்லு கேட்டுப் பார்க்கலாம்"
குருவி :"அங்கொரு வீட்டில் கூடு கட்டினேன் அதனைச் சொல்லுவேன் தங்கமாய்ப் போற்றி என்னைக் காத்தனர் தாயன்புடன் வளர்த்தார் கூடு கட்டியே முட்டையும் வைத்தேன் குஞ்சுகள் தோன்றின தேடி உணவை ஒடிக் கொணர்ந்தேன்திக்கெட்டும் போய்ப் பறந்தேன்"