இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தை:"சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சேதி சொல்லுவாய்
எட்டுத் திசையிலும் என்னென்ன சேதி
எனக்குச்சொல்லுவாய்"
குருவி: "பட்டுக் குழந்தை பட்டுக் குழந்தை
பாட்டுப் பாடுவோம்
கெட்ட கவலைகள் கிட்ட வராது
பாட்டுப் பாடுவோம்"
குழந்தை:"பாட்டு வேண்டாம் கதையைச் சொல்லு
கேட்டுப் பார்க்கலாம்"
குருவி :"அங்கொரு வீட்டில் கூடு கட்டினேன்
அதனைச் சொல்லுவேன்
தங்கமாய்ப் போற்றி என்னைக் காத்தனர்
தாயன்புடன் வளர்த்தார்
கூடு கட்டியே முட்டையும் வைத்தேன்
குஞ்சுகள் தோன்றின
தேடி உணவை ஒடிக் கொணர்ந்தேன்
திக்கெட்டும் போய்ப் பறந்தேன்"