உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மண்டபத்திற்குள் சாறாகக் கொண்டு வந்து சேர்த்தீர்கள். அதே சிரமம் அருமை நண்பர் சாமிவேலு அவர்களுக்கும் வேறு சில அமைச்சர்களுக்கும் அன்றைக்கு ஏற்பட்டதை நான் நன்றாக அறிவேன். இன்றைக்கு அந்த அன்புத் தொல்லையிலிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காக நம்முடைய சாமிவேலு அவர்கள் உபாயம் செய்து கொல்லைப்புற வழியாக என்னை அழைத்து வந்துவிட்டார். (கைத்தட்டல்) பொதுவாக கொல்லைப்புற வழியாக வருவது எனக்குப் பிடிப்பதில்லை. அது அரசியலில் ஆகட்டும், இலக்கியமாகட்டும். அதிலே கொல்லைப்புற வழியை நான் என்றைக்கும் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் உங்களுடைய அன்பு, பாசம், நீங்கள் என் மீது கொண்டிருக்கின்ற உணர்வு மிக்க உறவு, அதன் காரணமாக நான் இங்கே முழுமையாக வந்தால்தான் ஏதாவது பேச முடியும் என்பதற்காக - ஒருவர் கையை ஒருவர் காலை என்று ஆளுக்கொரு உறுப்பை எடுத்துக்கொண்டால் கருணாநிதி இங்கே வந்ததாகத் தகவல் என்பதைத்தான் சாமிவேலு அவர்களால் இங்கே கூற முடியும். எனவேதான் இந்த வழியைத் தேர்ந்தெடுத்து அரிய வாய்ப்பினை உங்களைச் சந்திக்கின்ற பெற்றிருக்கின்றேன். நான் நான் சிங்கப்பூரில் தமிழ் மக்களிடையே உரையாற்றும் போது ஒன்றைச் சொன்னேன், "சிங்கப்பூரில் பிரதமரைச் சந்தித்தேன், அமைச்சர் பெருமக்களை சந்தித்தேன், வணிகப் பெருமக்களைச் சந்தித்தேன், அவர்களுடைய குழுக்களை, நிறுவனத்தினரை எல்லாம் சந்தித்து அவர்களோடு பேசினேன். ஆனால் இப்போது உங்களைச் சந்திக்கின்றேன், பேசமுடியாமல் நிற்கிறேன், உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் போல் இருக்கிறது" என்று சொன்னேன்.