பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அவர்கள் இருந்தார்கள். அதன்பின் அவர்கள் மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

வழியிலேயே, இறைவாக்கு அருளப்பெற்றது.

"(நபியே) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெள்ளி அளித்துள்ளோம்....."

பெருமானார் அவர்கள், உமர் அவர்களை அழைத்து, அச்செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்டதும் உமர் அவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.


43. பெருமானார் அவர்களின் பெருமை

பெருமானார் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், மக்காவுக்குப் போகும்போது பதினாயிரம் முஸ்லிம்களும் சென்றார்கள். முன்னர், போகும்போது ஆயிரத்தி நானூறு பேர்களே சென்றார்கள். குறுகிய காலத்தில் இவ்வளவு தொகையினர் இஸ்லாத்தில் எவ்வாறு சேர்ந்தனர்?

முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியில் ஓயாமல் சண்டை-சச்சரவு நிகழ்ந்து வந்ததால், ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பு இல்லாமல் இருந்தது.