பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

17


9. எதிர்த்து நிற்போர் யார்?


போர்ப் படை புறப்பட்டு விட்டது. நற்கிளி தலைமை தாங்குகிறான்...

ஊழிக் காலம் போல், வானம் இருள்கின்றது. கொடிகள், திசைகளை மூடுகின்றன...

ஏழு கடல்களும் அடி பெயர்ந்து செல்வது போற் படை முழங்குகின்றது. வேல்கள், விண்முகட்டைக் கிழிப்பது போன்று நீண்டு மின்னி வெட்டுகின்றன...யானைகள் முழங்குகின்றன. இடிமுழக்கம் கேட்கிறது...

இப்படையை எதிர்ப்போர் யார்? ஊழிப் புயல் முன் நிற்போர் யார்? பாவம், அவர்கள் இரங்குதற்குரியர்


10. தலைவனின் வலிமை


பகைவர் அதியமானை எதிர்க்கத் துணிந்து விட்டனர். அவ்வையாருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறந்தது. ஆதலால் இந்த எச்சரிக்கை விடுத்தார்.

“பகைவர்களே! போருக்கு வராதொழிவிர்! வந்தால், ஒழிவீர் என்பது உறுதி!

எங்கள் படையில் உள்ள ஒரு மறவனுக்கு நீங்கள் ஈடாக மாட்டீர்.

அம்மறவனைப் பற்றி ஒரு வார்த்தை ஒரே நாளில் எட்டுத் தேர்களைச் செய்யும் தச்சன், ஒரு மாதம் முயன்று ஒரு தேர்க்காலைச் செய்தான் என்றால், அத் தேர்க்கால் எப்படிப் பட்டதாயிருக்கும்?