பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



புலவர் சிந்தனை விரிந்தது. குடும்பத்தால் ஏற்படும் தொல்லையை நினைத்தார். தனியாக இருந்தால் எப்படியேனும் வாழ்ந்து தொலைத்து விடலாமே என்று எண்ணினார். குடும்பம், கால் விலங்காய் இருக்கிறதே என்று ஏங்கினார்.

அப்படியே தளர்ந்து விடவில்லை. அவர் மனந்தேறினார். தன்னை நம்பி வாழ்வோரை நினைத்தார். கலைமான் கடமையை எண்ணினார். தன் கடமையை ஆற்றக் கால்கள் விரைந்தன.


84. “துன்ப உலகம்"

தெரு வழியே நடந்து சென்ற பக்குடுக்கை நன் கணியார் புதுப்பது அனுபவங்கள் அடைந்தார். என்னே வாழ்க்கை. என்னே உலகம்.

ஒரு வீட்டிலே சாப்பறை கேட்கிறது மற்றொரு வீட்டிலே முழவு முழங்குகிறது.

ஒரு வீட்டில் திருமணம்!

அடுத்த வீட்டிலே பிணம்!

மணமாகிய பெண்டிர் மகிழ்கின்றனர்; பிணமாகிய கணவனைப் பிரிந்த பெண்டிர் அழுகின்றனர்!

இவ்வுலகின் தன்மையோ மிகுந்த துன்பம் செறிந்தது.

இவற்றை உணர்ந்தோர் அழ வேண்டுமா?

உலகின் உண்மை இயல்பை உணர்ந்தவர், துன்பத்தை நீக்கிவிட்டு இன்பத்தை மட்டுமே கண்டு நன்னெறிக்கண் ஈடுபட்டு மகிழ் வேண்டும்.