பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

75



துன்பம் வருவதும் அதைத் துடைத்துக் கொள்வதும் நம் செயலால் ஏற்படுவது

வெள்ளம் ஒடுகின்ற திசையில் மிதந்து செல்லும் தெப்பம் போல, இறைவன் எண்ணம் ஒடும் திசையில் உயிர்ப்புணை மிதந்தோடும்!

திறந்தெரிந்த நூலோரின் நற்காட்சியால் இவற்றைத் தெளிந்தோம்!

ஆதலால், இவர் பெரியர் என்று புகழமாட்டோம். இவர் சிறியர் என்று இகழவும் மாட்டோம்!

இப்படி வாழ்ந்தால் நெஞ்சத்தில் பாரம் இருக்காது. சிட்டுக் குருவிபோல் எட்டுத் திக்கும் ஒடிக்களிக்கலாம்.


83. தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!

கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக ஒடிவிடலாம். தன் கன்றுகள் தப்ப வேண்டுமே, தன் காதலி பிழைக்க வேண்டுமே என்று அஞ்சி ஒடுகின்றது. இந்தக் காட்சி புலவர் கண்ணை விட்டு மறையவே இல்லை. சிறிது தொலைவு சென்றார். மான் ஒன்று தனியாக நின்று மேய்ந்துக் கொண்டிருந்தது. வேடன் வில்லுடன் ஒடி வந்தான் மானோ பாய்ந்து ஓடி மறைந்து விட்டது.