17
எஃகு-இச்சொல்லில் மத்தியில் இருக்கும் எழுத்தைக் கவனி. இது சமைத்தற் கருவியாகிய அடுப்புக் கட்டி போன்று இருக்கின்றது. இது போரில் உபயோகப்படும் கேடயத்தில் உள்ள மூன்று ஆணிகள் போன்றும் காணப்படுகின்றது. இது இவ்விருவகை ஆய்தங்களைப் போன்று இருப்பதால் இது ஆய்த வெழுத்து என்று பெயர் பெற்றது.
இச்சொல்லின் முதலில் 'எ' என்ற எழுத்து இருக்கின்றது. இது குற்றெழுத்தாகும். இறுதியில் ‘கு’ (க்+ உ) இருக்கின்றது. இது வல்லெழுத்தாகும் இவ்வாறு இந்த ஆய்த வெழுத்து குற்றெழுத்திற் கும் வல்லெழுத்திற்கும் இடையிலேயே எப்பொழுதும் வரும். இது உயிர் எழுத்தையும், மெய்யெழுத்தையும் சார்ந்து வந்தாலும் உயிருமாகாமல், மெய்யுமாகாமல் தனி நிலையாகவே வரும். இதற்குத் தனி நிலை என்ற பெயரும் உண்டு.
“மூன்று புள்ளி வடிவால் ஆகிய எழுத்தே ஆய்தவெழுத்தாம். இது தனித்து வழங்காது. இது குற்றெழுத்திற்கும் வல்லெழுத்திற்கும் இடையில் தான் வரும்."
பயிற்சி
1. உயிர்மெய் எழுத்தென்றால் என்ன ? எத்தனை ? எவ்வாறு?