121
பூ க் க ளை விரியும்படி செய்தன. அதில் மாதவியும் மல்லிகையும் தம் மணம் வீசி நின்றன. பாதிரியும் கொன்றையும் பிணியவிழ்ந்தன. வண்டுகளும் வரிக் குயில்களும் பாடின.
அச் சோலையின் நடுவில் செய்குன்று ஒன்றிருந் தது. அதில் வேங்கை மரம் ஒன்று நின்றது. அது விசும்பு து ைட த் து, பசும் பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்ப நறுமலர் பூத்து நின் றது. அதன் பக்கத்தே ஓர் பெண் நின்ருள்.
ஆங்கு தகடுபடு பசும் பொன் சிகரங்களின் முகடு தொடுத்து இ ழி ந் த து ஓர் அருவி. அது பொன் கொழித்து, மணிவரன்றி மாணிக்கத்துடன் ஆடகப் பாறை மேல் அதிர்ந்தது. அவ்வொலி முரசொலியாக, வண்டொலி யாழொலியாக வரிக்குயிலும், இளஞாயிறு எறிப்ப தன் கலாபம் விரித்தாடியது ஓர் மயில். அக் காட்சியை அப்பெண் கண்டு மகிழ்ந்தாள்.
இது போல எ ல் லா ப் பொருட்களையும் வருணித்துப் பார்.
விளக்கக் கட்டுரை
விளக்கிக் கூறுவதே விளக்கக் கட்டுரையாம்.
பனை
கிராமங்களைச் சுற்றி பனை மரங்களே அ தி கம் இருக்கின்றன. அவைகள் இவ்வுலகக் கற்பகத் தருக்க ளாகும். யார் எதை விரும்பினும் அ து கொடுத்து உதவுகின்றது. உணவு வேண்டுவோருக்கு உண