140
நீயும் செல்வி மங்கையர்க்கரசியும் நீடு வாழ்வீர் களாக இல்லறத்தின் பண்பும் பயனுமாகிய அன்பும் அறனுங்கொண்டு வாழ்வீர்களாக.
அருகுபோல் வேரூன்றி, ஆல்போல் தளிர்த்து. நகமும் சதையும் போற் கூடி, மலரும் மணமுமாய்ப் புகழ்கொண்டு நீங்கள் இருவரும் விளங்குவீர்களாக,
யாவர்க்கும் தலைவனும் இறைவன் மேற்கூறிய வற்றை உங்கட்கு நல்க அவன் நல்லடி வணங்கு கின்றேன்.
அன்புள்ள நண்பன்,
அ. சுப் பிரமணியன்.
வாழ்க்கை வசதிகள் சில வேண்டி ஊரவர் ஒரு கூட்டு விண்ணப்பம் எழுதுவதுபோல்
எழுதுதல்
சென்னை மாநில, முதல் அமைச்சர் அவர்கட்கு,
சென்&ன.
வடக்கன்குளத்திலுள்ள மக்களின்
கூட்டு விண்ணப்பம்
நாங்கள் வடக்கன்குளம் என்ற ஊரிலுள்ள மக்க ளாவோம். எங்களது ஊர் திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள நான்குநேரி மண்டலத்தின் தென் பகுதியில் இருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் பெரும் பாட்டையின் தென்கிழக்கே மூன்றரை கல் தொலையில் எங்களது ஊர் அமைந்திருக்கிறது.