பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

பூனைக்குப் பால் கிடைத்தது, தானும் தினமும் பால் குடித்தான். பால் கறக்கவும், பசுவைக் கவனித்துக் கொள்ளவும் சமைக்கவும் பழைய வேலைக்காரியை முழுநேரமும் வேலைபார்க்கும்படி ஏற்பாடு செய்து கொண்டான்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த சந்நியாசி, வேலைக்காரியையே தன் மனைவியாக வைத்துக் கொண்டான்.

‘சந்நியாசி கோவணம் காத்த கதை’ என்று மக்கள் கூறுவார்கள்.


50
குழந்தையிடமிருந்து கற்றுக் கொண்டாள்

கணவனும் மனைவியும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். கணவன் ஒரு கடையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தான்.

மனைவியின் பிறந்த வீடு வசதியானது. ஆகையால் அங்கே இருந்து அவ்வப்போது தேவையானவற்றை வாங்கி வந்து குடும்பத்தைச் சமாளித்தாள்.

அதனால் கர்வம் கொண்டு, கணவனைக் கேவலமாகப் பேசி வந்ததுடன் உருப்படாதவரே! என்று சொல்வாள், அப்படியே கூப்பிடுவாள்.

மனைவியின் அலட்சியத்தால் அவன் பொறுமை இழந்து, ஒரு நாள் வீட்டைவிட்டு சொல்லாமல் வெளியேறி விட்டான்.

அவர் எங்கே போனார் என்ன ஆனார், என்பதைப் பற்றி சிறிதும் அவள் கவலைப்படவே இல்லை.