பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix வாவியில் கதிரோன் தன்னை வரக்கண்ட தாமரைபோல் மேவிய தமிழாம் கன்னி மேனியூ ரித்தாள். ஆமாம்! அந்தநூல்-வரிசை தன்னை அடுத்ததாய்ப் புகழ்வி ளங்க வந்த நூல் தான்மா னிக்க வாசகர் என்னு மிந்நூல் இந்த நூல் தன்னை யானும் எழுத்தெண்ணிச் சுவைத்து வேறு எந்தநூல் இதற்கீ டென்றே இன்பத்தில் திளைத்துப்போனேன்! வேணியங் கொன்றைத் தாரான் விரும்பும் நல் லடியா ரான மாணிக்க வாசகன் சீர் மன்பதைக் குரைக்கு மிந்நூல் ஆணிப்பொன் னொத்த தாக அமைந்துவ திறங்கள் சொல்ல வாணிக்கும் கூட யிங்கே வார்த்தைகள் போதா தம்மா! பெருமான்மணி வாசகர்தாம் பிறந்தநற் பேறு பெற்ற திருவாத ஆரைப் பற்றித் தெரியாதார் வருந்த வேண்டாம் ஒருமுறை இந்த நூலை ஒதுவா ராகில் அன்னார் திருவாத ஆர்க்கே சென்று திரும்பிய உணர்வு கொள்வார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/11&oldid=863956" இலிருந்து மீள்விக்கப்பட்டது