பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பாய்ந்து வரும் வேகத்தால் வயல்களில் உள்ள முத்துக்களையும் காட்டு மலர்களையும் தன் அலை களாகிய கைகளில் சுமந்து பாய்ந்துகொண்டிருக்கும்.

இங்ங்ணம் வற்ருநீருடன் வளத்தோடு பெண்ணே யாறு பாய்வதால், இப்பதிக்குச் செல்வச் சிறப்பில் எங்ங்ணம் குறை ஏற்படும்? வெள்ளிய தகடு போன்ற வரால் மீன்கள் வாய்க்கால்களில் துள்ளி வி8ள யாடின. கமுகு அன்ன (பாக்கு மரம் போன்ற) கவினுடன் வளர்ந்த கரும்புகள் தேனைச் சிந்திக் கொண்டிருந்தன. கதிர்ச்சாலிகள் நென் மணிகளில் நிரம்பப் பாலினைப் பெற்று மிளிர்ந்தன. தோட்டங் களில் தென்னேபோலக் கமுகுகள் தோற்றமளித்தன. உழவர் உழுத சால் வழிகளில் முத்துக்கள் சிந்திக் கிடந்தன. நீர் வளத்தால் இப்பிகள் கருவுற்று ஈன்ற முத்துக்களே அங்குச் சிந்தி இடம் பெறுதற்குரியன ஆயின. வயல்களில் உழத்தியர் களையெடுப்பர். களைகளாகக் காணப்படுவன புல்லும் அல்ல; பூண்டும் அல்ல; செங்கழுநீரும் செந்தாமரையுமே ஆம். அவ்ற்றையே மள்ளர் பிடுங்கி எறிய, அவை நிலங்களின் வரம்புகளில் மலிந்திருக்கும்.

மாடமாளிகைகளிலும் கூடகோபுரங்களிலும் வாழும் மயிலன்ன மங்கையர் குளித்துக் கூந்தலை ஆற்ற நிலா முற்றம் செல்வர். ஆண்டுத் தம் குழலுக்கு அகிற்புகையும், ஆரப் (சந்தனம்) புகை யும் ஊட்டிக் கூந்தலை உலர்த்திக்கொண்டிருப்பர். இல்லங்களில் வாழும் நல்லெண்ணமுடையவர்கள் விருந்தளிக்கும் உள்ளம் படைத்திருந்தார்கள்.