பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மா தவம் புரிவாள் 13. சார்புப் பெயர்களுள்ளும் சிலவற்றில் தெளிவின்றிக் குழப்பம் உள்ளது. 14. இன்னின்னது இன்னின்ன நோய் போக்கும் என்பதை விளக்கும் பயன் மர இனம் அனைத்துமே, அனைவருக்குமே எளிதில் கிடைத்து அவ்வந் நோயைப் போக்கும் என்று சொல்வதற்கில்லை. சிலருக்கு ஒத்து வரலாம் - சிலருக்கு ஒத்து வராமல் போகலாம். சில நோய்கட்கு, குறிப்பிடப்பட்டுள்ள சரக்குகள் மட்டும் போதா, அவற்றுடன் வேறு சில சரக்குகளையும் துணை யாகச் (அனுமானமாகச்) சேர்த்து உட் கொண்டாலேயே நோய் தீரும். எனவே, குறிப்பிட்ட ஒரு பயன் பெயரின் துணை கொண்டு குறிப்பிட்ட ஒரு நோயைப் போக்க முடியாமற் போகலாம். 15, பயன் பெயர்கள் சிலவற்றை நம்பிச் சிலர் துணைப் பொருள் இன்றியோ, அளவு - காலம் போன்றவை தெரியாமலோ உட்கொள்ளின் எதிர்மாறான பயன் நேரிட்டு விடலாம். 16. வடிவால் வந்த பெயர்களுள், சில பெயர்கள், சரியான பொருத்தம் உடையனவாய்த் தோன்றவில்லை. 17. சில மர இனங்கள், உலோகங்களை மாற்றுவ தாகவும் உருக்குவதாகவும் பற்பம் (பஸ்பம்) ஆக்குவதாகவும் சொல்லபட்டுள்ளன. இரசவாதம் இடம் பெற்றுள்ளது. இவை முற்றிலும் சரியா? இப்போது செய்ய முடியுமா? - முழு வெற்றி கிடைக்குமா? - என்பது சிக்கலான செய்தி. குறை சொல்வதாயின், இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். 3. கிறைகள் இனி, மர இனப் பெயர் வைப்புக் கலை முயற்சியினால் பெறப்படும் நன்மைகளைக் காண்பாம்: