உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

431


ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டு அவை இங்கே அனுப்பி வைக்கப் பட்டு இங்கே போதுமான விளக்கங்களைத் தந்திருக்கிறோம் இதை விசாரிக்கிற உரிமை அவர்களுக்கு அரசியல் சட்டத்திலே உண்டா இல்லையா என்ற பிரச்னையை எழுப்பி போதுமான விளக்கங்களை அளித்து இருக்கிறோம். ஒரு பதிலுக்கு இரண்டு பதிலாக இந்த மாமன்றத்திலே வைத்திருக்கிறோம். அதைப் போய் அங்கே கொடுத்தவர்கள் தயவுசெய்து இந்த மன்றத்திற்கு வந்து, தைரியமிருந்தால் அதைப்பற்றி விவாதிப்பதற்கு இங்கே தயாராக இருக்க வேண்டும். இதையே அக்னி குண்டமாக மாற்றிக்கொண்டு, இந்த அக்னி குண்டத்திற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது, தயாராக இருக்கிறது என்பதை மாத்திரம் சொல்லிக்கொண்டு இந்த அளவிலே அமைகிறேன். வணக்கம்.