பக்கம்:மான விஜயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

நாமகள் வணக்கம்.

நேரிசை வெண்பா. நாமகள் பூங் தாட்கு கலங்கொள் சிலம்பொன்று தேமருவு செந்தமிழிற் செய்குதுமாற்-பாமயிலெக் நாத்தா னரங்கமா நண்ணி நயந்துதிருக்

கூத்தாடி கிற்குங் குறித்து. (5)

நடராசர் வணக்கம்.

நேரிசை வெண்பா,

மான விசயமெனு மன்னு டகம்புலவர் போனக மாகப் புகல்கிற்பா-ஞானச்

சபாபதிப்பேரின்பத் தனிப்பொருளின் ருளே யவாவிரெஞ்சமே யடை. - (6)

சங்கப்புலவர் வணக்கம். .

கலி விருத்தம். உலக மென்னு முயர்தமிழ் வாணரை யிலகு பொன்னக ரின்பமும் வெஃகலா

வலகில் பேரவை யாளாை கல்லிசைப்

புலவ சைத்தினம் போற்றி வணங்குவாம். (7)

(செய் - 5.) காமகள் - வாணி. பூந்தாள் - கமலப்பூவனையதாள். கலம் - அழகு. சிலம்பு - நூபுரம். கேம் - இனிமை. பாமயில் - பாவாகிய மயில்; கலைமகள். சர்ச் தான்: தான் - சாரியை. அாங்கம்.ாடனசாலை. குறித்து - அருள் செயக்கருதி, உருவ கவனி. -

(செய் - 6.) மானம் - குடிப்பிறந்தார்க்கு உரியவாய குணங்களுள் முதன்மை யானது. இஃது எஞ்ஞான்றும் சக்கிலேமையிம் முழாமையும் தெய்வத்தாற் முழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாம். விசயம்-வெற்றி. மான விசயம் - மானத்தாலடைச்ச் வென்றி, வாள்வென்றி யென்முற்போல. மூன்றனுருபும் பயனு முடன்முெச்சது ஆறனுருபுக் தொகையுமாம். மன்-நிலைபெற்ற போனகம் - உணவு. தனிப்பொருள்: பாம்பொருள். தமது தமிழாசிரியர் பெயாான் நடராஜப் பெருமானைக் குறித்தது. ஈண்டுக் கருதற்பாலது. - - -

(செய்-7) உலகமென்ப துயர்த்தோர் மாட்டே என்பதில் உயர்ந்தோர் இவார்வர் என்பதை விளக்கினர். வெஃகலா - விரும்பாக. அலகில் பேரவையாளர் அளவில்லாக பெருமை வாய்க்க சங்கப் புலவர். தமிழுள்ள அளவும் இவர் ് நிற்குமாதலின் கல்லிசையென விசேடித்தனர். - - •

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/23&oldid=656089" இலிருந்து மீள்விக்கப்பட்டது