ராசீ
109
“துருவாசரா? இன்று நீங்கள் விழித்த முகம் சரி இல்லை” என்றார்.
“ இவர் முகத்தில்தான் விழித்தோம்” என்றார்கள் அத்துவாரபாலகர்கள். “வைகுந்த வாசலை விட்டு விட்டு ரேஷன் கடை அரிசி வாங்கும் நேஷனில் பிறக்கச் சொல்கிறார்” என்றார்கள். தம்மைப் பார்த்தபின் தான் தலைவரைப்பார்க்க முடியும்?” என்ற ஆணவம் அகன்றது என்றனர்.
“ஏழு பிறப்பு அவர்கள் எடுக்க வேண்டும்” என்றான் துருவாசன்.
“பிறப்பே கூடாது என்று பிரசாரம் செய்யும் பூவுலகில் எங்களை வரவேற்கமாட்டார்கள்” என்றனர். “பிறப்பைக் குறைக்க முடியுமா” என்று கேட்டனர்.
“ஏழு பிறப்புப் பிறந்து அப்பாவியாக வாழ்ந்து எப்பாவமும் செய்யாமல் இறுதியில் இறைவனடி சேர விரும்புகிறீரா? சுத்தியும் கத்தியுமாகச் செயல்பட்டுப் புரட்சிக்காரனாக மாறி மூன்று பிறவிகளில் உம் கதையை முடித்துக் கொள்ள விரும்புகிறீரா?” என்று கேட்டான் துருவாசன்.
“ஆளும் கட்சியில் இருந்து கைதூக்குவதைவிட எதிர்க் கட்சியில் இருந்து கை நீட்டுவதே மேல் என்று தம் முடிவைத் தெரிவித்தனர். இரணியன் இரணியாட்சகன்; இராவணன் கும்பகருணன் என இரட்டையராக இயங்கியவர் இப்பிறவியில் கம்சனும் சிசுபாலனுமாக இணைந்து இந்த உலகைத் துவம்சம் செய்யப் பிறந்தனர் என்றான். “இனி அவர்கள் தேர்தலில் நிற்கத் தேவையில்லை; காவலர்களாக மறுபடியும் வைகுந்தத்தின் படியில் ஏவல் செய்து கொண்டு நிற்பர்” என்றான் வியாசன்.
“பிறப்பு வரலாறு புரிகிறது! கண்ணன் ஏன் இப்பிறவியில் சிசுபாலனை அழிக்க வேண்டும்?” என்ற வினா எழுப்பப்பட்டது.