பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடிமுழக்கம் போன்ற சிரிப்பு

பளிச்சென்று ஒரு மின்னல் மின்னியது. கட்டியிருந்த வாரை அறுத்துக் கொண்டு குதிரைகள் வேறு வேறு பக்கங்களில் பாய்ந்தோடின.சாரதி மயக்கம் போட்டுக் கீழே விழுங்தான். திடீரென்று ஏற்பட்ட வெளிச்சத்தில் கண்கூசியது.அரசியும் இளவரசியும் கண்களை மூடிக் கொண்டார்கள்.

மர்மன்னர் சோமசுந்தர மாராயரின் கண்களும் அந்த மின்னல் வெளிச்சத்தில் கூச்சமடைந்தன. இருந்தாலும் அவர் உடனே விழித்துக்கொண்டார். ஐம்பத்தாறு தேசங்களையும் தன் தோள்வலியாலும் நெஞ்சுறுதியாலும் வென்று வாகை சூடிய அவருக்கு அந்த நேரத்திலும் அச்சம் உண்டாகவில்லை.

8