பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விழித்தகண் விழித்தபடியே எதிரே நடப்பது என்ன என்று அறிய அவர் முயன்று கொண்டிருந்தார்.

எதிரில் சிறிது தூரத்திலே ஒரு புலிபாய்ந்து வந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அது மன்னரை நோக்கிப் பாய்ந்து வருவது போல் இருந்தது.மன்னர் கண்ணிமைக்காமல் சிறிதும் மனங்கலங்காமல் அதை உற்று நோக்கினார்.

அந்தப் புலியின் முதுகிலே ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். அவன் கையிலே ஒருகோல் வைத்திருந்தான். அந்தக் கோலிலிருந்துதான் மின்னல் ஒளி பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

அரசர் எதிரில் வந்ததும் புலி நின்றது. புலியின் முதுகில் இருந்த அந்த மனிதன் பேசத் தொடங்கினான்

அவன் முகம் பார்ப்பதற்கு ஒரே அவலட்சணமாயிருந்தது. குழிவிழுந்த கண்களின் பார்வை மிகக் கொடூரமாயிருந்தது. அவன் மூக்கும் மீசையும் அவன் உருவத்தை மேலும் விகாரமாகத்தான் எடுத்துக் காட்டின.

அவன் வாயிலிருந்து இரண்டு பற்கள் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன.

9