பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவனையும் அவன் தோற்றத்தையும் அவன்தன்னை நோக்கிய பார்வையையும் கண்ட மன்னர் அவன் நன்மைக்காக வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்

தன் எதிரில் வந்து, தலைவணங்காமல் புலியின் முதுகில் அமர்ந்தபடி தன்னைக் கொடூரமாய் நோக்கிய அந்த மனிதனைப் பார்த்து, மாமன்னர் சோமசுந்தர மாராயர் பேசத் தொடங்கினர்.

"தீய உருவமும் தீய பார்வையும் தீய செயலும் கொண்ட மனிதனே, நீ யார்? எதற்காக என்னைத் தேடிவந்திருக்கிறய்? என்ன வேண்டும்? சொல்!" என்று கேட்டார் மாமன்னர்.

"ஐம்பத்தாறு தேசங்களையும் வென்று ஆட்சி நடத்துகின்றோம் என்ற ஆணவங்