பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பக்கத்திலே யிருக்கும் பாலைவனத்தைப் பற்றி நீ யறிய மாடடாய்.

"அந்தப் பாலைவனத்தின் மத்தியிலே ஒரு சுடலையுண்டு. அந்தச் சுடலையிலே பேய்கள் பட்டப்பகலிலே நடனமாடும். அவற்றை யெல்லாம் அடக்கிவைத்திருக்கும் ஒரே மனிதன் யார் தெரியுமா?

"நான்தான்!

"நான் ஒரு மந்திரவாதி. என் மந்திர தந்திர வித்தையினால் பேய்களை அடக்கிவைத்திருக்கிறேன். மாயமந்திரங்களால் இந்த உலகிலே நான் இணையற்ற ஆட்சி நடத்தி வருகிறேன்.

"மந்திரவாதி உருத்திர கோபன் என்றால் சிரித்துக்கொண்டிருந்த பிள்ளையும் அழத்தொடங்கிவிடும். வாழைப்பழத்தை உரித்துக் கொண்டிருந்த பிள்ளையும் அதை நழுவவிட்டுவிடும். அழுத பிள்ளையும் வாய்மூடும், அடங்காத பிள்ளையும் அடங்கும். வடநாட்டிலே எந்தப் பட்டணத்திலே நான் நுழைந்தாலும் அந்தப் பட்டணத்து வீதியெல்லாம் சுடுகாடு போலாகிவிடும். ஒரு நாய் கூட வீதியிலே நடந்து செல்லாது. என் பெயர் கேட்டால் அத்தனை பயம்.

14