பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதுவே சிறந்தவழி என்று மாமன்னரும் உணர்ந்தார்.

மயங்கிக்கிடந்த சாரதியைத் தட்டி எழுப்பினர். அவன் எழுந்திருக்கவில்லை. முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்தார். கண்களைக் கசக்கிக் கொண்டே அவன் எழுந்திருந்தான். மந்திரவாதி இருக்கிறானா என்று சுற்று முற்றும் நோக்கினான். இல்லை என்று தெரிந்தபின் எழுந்து நின்றான்.

"குதிரைகள் பக்கத்தில் எங்காவது நிற்கும். விரைவில் அவற்றைப் பிடித்துக் கொண்டுவா!" என்று மாமன்னர் கட்டளையிட்டார்.

சாரதி விரைந்து சென்றான். சிறிது நேரத்தில் இரு குதிரைகளையும் கண்டுபிடித்து நடத்திக்கொண்டு வந்தான். இரண்டையும் இரதத்தில் பூட்டினான். அரசர் கட்டளையின்படி மீண்டும் திருக்கோயிலுக்குச் செலுத்தினான்.

கோயில் வாயிலில் குருக்கள் நின்று கொண்டிருந்தார்.

வழக்கத்துக்கு மாறுபாடாக மாமன்னர் கோயிலுக்குத் திரும்பி வந்ததைக் கண்டு அவர் வியப்படைந்தார்.

19