பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கோயில் குருக்களின் ஆலோசனை

மந்திரவாதி அந்த இடத்தை விட்டு அகன்ற பின் மீன்விழி மாதேவியார் கண்விழித்தார். கவலையோடு மாமன்னர் அமர்ந்திருப்பதையும் இளவரசி செந்தாமரை இரதத்தின் கீழ்த் தட்டில் விழுந்துகிடப்பதையும் கண்டு அவர் பதறிப் போனர். நடந்தவற்றை அரசர் கூறக் கேட்ட போது அரசியாரின் கலக்கம் மேலும் அதிக மாயிற்று.

"அரசே, இம்மாதிரியான இக்கட்டான சமயங்களில் ஆண்டவனின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? இப்பொழுதே நாம் மீண்டும் கோயிலுக்குத் திரும்புவோம், இறைவன் நம்மைக் காப்பாற்றுவார்" என்று கூறினார் மீன்விழி மாதேவியார்.

18