பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவைகளைக் கடந்துசென்ற மணிவண்ணன் சுடுகாட்டை ஒட்டியிருந்த ஒரு கல் மலையை நோக்கிச் சென்றான். போகும் வழியெல்லாம் ஒரே முள் காடாக இருந்தது. ஆகவே குதிரை அந்த இடத்திலே பறந்து சென்றது.

அந்த மலையின் அடிவாரத்திலே ஒரு குகை இருந்தது. குகை வாசலில் ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது. அந்தப் புலிதான் மந்திரவாதி ஏறிவரும் புலி. மந்திரவாதி வெளியில் செல்லும்போது அவனைச் சுமந்து செல்லும். அவன் குகையில் தங்கியிருக்கும் போது வாசலில் காவல் இருக்கும்.

அந்தப் புலியைக் கண்டவுடனே மணிவண்ணனின் பஞ்சகல்யாணிக் குதிரை மிரண்டது. அது பயப்படுவதைக் கண்ட மணிவண்

54