பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிர்ச்சி தரும் குரல்

டாண் என்று கோயில் மணி அடித்தது.

உச்சிக் கால பூசை நடக்கத் தொடங்கி விட்டது.

மணிஅடித்த சமயம் அரண்மனையிலிருந்து ஒர் இரதம் புறப்பட்டது. அந்த இரதத்திலே மாமன்னர் சோமசுந்தர மாராயர் அமர்ந்திருந்தார். மாமன்னருக்குப் பக்கத்திலே அந்நாட்டின் அரசி மீன்விழி மாதேவி அமர்ந்திருந்தார்.

அவர்கள் இருவருக்கும் நடுவிலே அவர்களின் அருமைச் செல்வியும் அந்நாட்டின் இளவரசியும் அழகரசியுமான செந்தாமரை உட்கார்ந்திருந்தாள்.

5