பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசரும் அரசியும் இளவரசியும் இரண்டு குதிரைகள் பூட்டிய அந்த இரதத்திலே ஏறிக் கோயிலுக்குப் புறப்பட்டார்கள்.

ஒவ்வொருநாளும் அவர்கள் உச்சிக்கால பூசைக்குத் தவருமல் செல்வார்கள். ஆண்டவனிடத்திலே அவர்களுக்கு அவ்வளவு பக்தி.

எந்த வேலை கிடந்தாலும் அந்த நேரத்திலே அதை மறந்துவிடுவார் அரசர். கோவிலுக்குப் போய் வந்துதான் மறுவேலை பார்ப்பார்.

அரச குடும்பம் கோவிலுக்கு வந்த உடனே தீபாராதனை நடந்தது. ஆண்டவன் சிவலிங்க உருவமாய் வீற்றிருந்தார். அவர் நெற்றியிலே பூசியிருந்த திருநீற்றுப் பட்டைகள் வெள்ளித் தகட்டால் ஆகியிருந்தன. தீப ஒளியில் அவை ஒளி வீசித் திகழ்ந்தன. அரசர் பயபக்தியோடு ஆண்டவனை வழிபட்டார். அரசியும் "அரகரமகாதேவா!"என்றுகூறி இறை வனை வணங்கினாள். இளவரசியும் தேவாரம் பாடித் தெய்வநாதனைத் தொழுதாள்.

பூசை முடிந்தது.

குருக்கள் எல்லோருக்கும் திருநீறு வழங்கினார்.

6