பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 LBT డిషు பண்ட மலர்

பற்றி வாழ்கிறவர்கள் அடியர்ர்கள். அடியார்கள் அவளுடன் இருக்கும் பிள்ளைகள். அன்னையை விட்டுவேறு ஊர்களில் வாழும் பிள்ளைகளுக்குத் துன்பம் வந்தால் அன்னைக்குத் தெரியாது; உடனே அவளுடைய உதவி கிடைக்காது. ஆனல் இளங்குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அது அழுதால் அன்னை என்ன கைவேலை இருந்தாலும் ஒடிப்போய் அதைக் கவனிப்பாள். ஆருயிர்கள் அத்தனையும் அன்னையின் குழந்தைகளே. ஆனல் தம் மனைவியின் மயக்கத்தில் ஆழ்ந்த பிள்ளைகளாய், வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாய் உள்ள பெரிய பிள்ளை களைப்போல மற்றவர்கள் இருக்கிருர்கள். பக்தர்களோ அவளை ஒரு கணமும் பிரியமாட்டாத குழந்தைகளாக இருக்கிருர்கள். காலைக் கட்டிக்கொண்டு விளையாடும் குழந்தைகள், துன்பம் வந்தால் க்ாலேக் கட்டிக்கொண்டு அழும் குழந்தைகள், அவர்கள். .

உலகியலில் உடம்பு வளர வளர நாம் இந்த - உடம்பைப் பெற்றெடுத்த அன்னையை விட்டு விலகுகிருேம். முதலில் அவள் கருவில் இருக்கும்போது அவள் வேறு நாம் வேருக இருப்பதில்லை. இருவரையும் ஒருவராகவே உலகம் பார்க்கிறது. கருவுற்றிருக்கும் பெண்மணிக்கு இரண்டு டிக்கட்டோ, ஒன்றரை டிக்கட்டோ வாங்குவ தில்லையே! * , . -

குழந்தை பிறந்து இரண்டாக வேறுபட்டாலும் தாயின் அணிமையிலே இருக்கிறது. குழந்தை மெல்லத் தவழ் கிறது: தாயின் பார்வையெல்லைக்குள் அது விளையாடு கிறது. நாளாக நாளாகத் தாயை விட்டு விலகிப் போகிறது. சில மக்கள் மனைவி வந்தவுடன் தாயைத் திரும்பியும் பார்க்காமல் பிரிந்துபோய் விடுகிரு.ர்கள். இது உலகியல்.

அருளியலில் இதற்கு நேர்மாறன நிகழ்ச்சி நடைபெறு கிறது. அருளன்னையை நினைக்காமல் பிரபஞ்ச வியாபாரத்