இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சப்பையிட்ட பெருநாசி
வெள்ளையிட்ட பொட்டைவிழி
தந்தையெனக் கேயளித்த
தனமிவையே தாரணியில்
வெப்பமிட்ட காமமடு
வீழ்ந்துவிட்ட வாழ்வதனால்
விளைந்தவினை என்தாயும்
வெம்பி வெம்பிக் காலமெலாம்
உப்பைவிட்டு உடலுருகி
ஊர்வாயை மூடிவைத்து
உத்தமியும் போனாளென்
ஊனவுடன் மெய்தழுவி
அப்பிவிட்டு முத்தமிட்டு
ஆநந்தச் சொட்டுதிர்த்தே
அன்பறிவேன் அமுதமதே
ஆனாலும் குறையுடைத்தாம்
நிறையன்பே என்றாலென்
நெடுந்துயர வாழ்வறவே
இறுகியெனைத் தழுவியன்றே
என்மூச்சை முடித்திருப்பாள்
65
மி.-5