பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 10 ↑ குழு ஆள்: அதிகாரியுடன் செல். இறைவனைப் பணிய நீ எதைச் செய்தாலும், இசுரவேலரின் தெய்வம் உனக்குத் துணை நிற்பாராக. உன் செயல்கள் பிற இனத்தவர் இடை யில் அவரின் புகழ் பரப்பட்டும். உன் பிறப்பின்போது பெரிய செயல்களை அறிவிக்க தேவதூதன் உன்னேடு இருப்பானுக. அந்தத் தேவன், தன் முன்னறிவிப்பை உன் தாய் வயல் வெளியில் இருந்தபோது அறிவித்துவிட்டு, தீத்தழலில் பறந்து மறைந்தான். இப்போது அவன் உனக்குத் தீக் கேடகமாயிருந்து உன்னைக் காப்பானுக. தான் பள்ளத்தாக் கில் நீ தங்கியிருந்தபோது உன்னிடம் வெளிப்பட்ட அதே வல்லமை இந்த நெருக்கடி நேரத்தில் உனக்கு உதவுவதாக. வேறு எவரிடத்திலும் காணப்படாத தனித்தன்மை கொண் டது அந்த வல்லமை. ஆ! இத்தனை விரைவுடன், இளமைத் துடிப்புடன் மனேவா எங்கிருந்து வருகிருர்? அவர் சற்று நேரத்துக்கு முன்பு இங்கிருந்ததைவிட விழிப் பாகவும் சுறுசுறுபபாகவும் காணப்படுகிருர். அவர் தம் மகன் சிம்சோனைக் காண வருகிருரா? அல்லது வேறு ஏதேனும மகிழ்ச்சியான செய்தி கொண்டு வருகிருரா? மனுேவா: தோழர்களே, உங்களுக்கு அமைதி உண்டாவ தாக நான் இங்கே வந்தது என் மகன் சிம்சோனைக் காண்பதற்கன்று. சிம்சோன் பெலித்திய ஆண்டைகளால் அழைக்கப்பட்டதை நான் அறிவேன். இப்போது அவன் அவர்கள்முன் அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்து காட்டிக்கொண்டிருப்பான். இங்கே வரும்போது இதை நான் கேள்விப்பட்டேன். இச் செய்தி நகரெங்கும் ஒலித்தது. மக்கள் திரளாய் அரங்கில் கூடிவிட்டனர். எனக்கு அங்குச் செல்ல ஆசையில்லை. ஏனெனில் அவன் அங்கு நம் தகுதிக்கு ஒவ்வாத செயல்களைச் செய்துகொண்டிருப்பான். என் மகனின் விடுதலை பற்றி நான் எத்துணை நம்பிக்கை வைத் திருநதேன் என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இங்கு வந்தேன். குழு ஆள்: அந்த நம்பிக்கையில் நாங்களும் பங்கு கொள்வதில் மகிழ்ச்சியடைகிருேம். எங்களுக்கும் அதைப்