பக்கம்:மீனோட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மீனோட்டம் ரிக்ஷாக்காரன் கேட்டான். 'யஸ் ஸ்டாண்டுக்கு ஒட்டு, சுருக்க ஒட்டு-” 'அம்மா அம்மா மறந்துட்டீங்களா'-பின்னால்முருகன் கையை உயரத் தூக்கிக் கொண்டே ஓடி வந்தான். ஆனால் அவனால் வண்டியைப் பிடிக்க முடியவில்லை. வண்டி வேக மெடுத்து விட்டது. முருகன் வீசியெறிந்தான். ரிக்ஷாவுள், காலடியில், 'கிண்ணென்று தெறித்தபடி விழுந்தது. வெய்யிலில் அதன் பித்தளை பளபளத்தது. சாவி. வண்டி பறந்தது. முருகா, என் பிள்ளை அறையைத் திறக்கக் கொண்டு வந்தேன். என்னத்தையோ திறந்துட்டையேடா! கைகளில் முகம் புதைந்தது. அவள் தோள்கள் குலுங் கின. அதற்கு மேல் தாங்க முடியலில்லை. அதுவரைதான் சக்தி. அவர் கை, அவள் முதுகைத் தடவி, அவள் தோளை லேசாய் அணைத்துக் கொள்வதை உணர்ந்தாள். அவளுள் அப்போது நேர்ந்த கரையுடைப்யு அவளைத் தன்னோடு இழுத்துச் செல்கையில் தலைநிமிரவே பயமா யிருந்தது. ஆனால்-? அப்போ?? -அப்படின்னா??? நீ இருக் கையா???? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/93&oldid=870471" இலிருந்து மீள்விக்கப்பட்டது