பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்கை1 கடலின் கரையில் மணலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட் டுயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஒவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். படமெடுத்தாடும் பாம்பின் நஞ்சைப் பருகிடத் தவிக்கின்றேன் பாறைப் பரப்பில் பச்சைப் பயிரைப் பார்க்கத் திரிகின்றேன். மீராகவிதைகள் 0 150