பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லாய் இருப்போமோ வண்மையும் திண்மையும் உண்மையும் உண்மையில் வாழும் மயில் நாட்டில் கண்ணிய மின்றிச் சீனரும் ஈனரும் காலடி வைப்பதற்கே எண்ணிவந் திட்டால் இடுப்பு முறிந்திடும்; எலும்பு நொறுங்கிவிடும்! - மான மண்ணில் பிறந்த சிறுத்தைகள் நாங்கள்! - சும்மா மரமாய் நிற்போமோ? வலியறி யாமல்எம் வாள்.அறி யாமல் வஞ்சக வழிவகுத்தே எலியெனப் பிறர்நலம் எய்திட லாமென எண்ணிடில் நிச்சயமாய்க் கிலிபிடித் தோடுவர் எம்பகை வர்க்குக் கிறுக்குப் பிடித்துவிடும்! - வீரப் புலிக்கொடி ஏந்திய ஏறுகள் நாங்கள் சும்மா புல்லாய் இருப்போமோ? 1962 மீரா கவிதைகள் 0 174