பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பு அட்டைப் படத்திற்கு 'வீண்செலவு வேண்டாம்' என்று சேகர் பதிப்பகத்திலிருந்து 'பிளாக்" எடுத்துக் கொடுத்த கவிஞர் சுரதா எனக்கு எப்போதும் துணை நின்று உதவிய பேராசிரியர் ஆர். துரைசாமி தொலைவில் இருந்தாலும் எப்போதும் என் நலம் நாடும் நல்ல நண்பர் 'பிரன்ட் லைன்” திரு.எஸ்.விசுவநாதன் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்ற பிள்ளையைப் போல் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதோடு ஞாயிறுதோறும் என்னைச் சந்தித்து உரையாடி ஆறுதல் அளிக்க இரண்டு மணிநேரம் செலவு செய்யும் என் இளம் தம்பி - திரு.சந்திரகுமார் இந்த நிமிடம் வரை ஒரு குழந்தையைப்போல் என்னைக் காப்பாற்றி வரும் என் அருமைத் துணைவியார் இரா. சுசீலா இவர்கள் எல்லார்க்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீரா 197