பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

注2人多 一个一 s三人乡 6öᎠ ᎧᎫ ᎶöᎠ ᏓLᎫ ནོད། །ཟླུ་ A DCN. நிருவான மாய்க்கிடந்தாய் வையை! - இன்று நீர்ச்சேலை அணிந்துள்ளாய்; நன்றுன் செய்கை1 வருமான மில்லாமல் நின்றாய் - இன்று வள்ளல்போல் வாரிநீ வழங்கு கின்றாய்! மாமதுரைப் பதிகண்ட கொடையே! - தீய வறுமைத்திக் கேள்விக்கு வாய்த்த விடையே! தேமதுரத் தமிழ்நாட்டின் மறத்தை - இன்று தெரிவிக்கக் காட்டினையோ சிவப்பு நிறத்தை? கோடிப்பூ மாநாட்டு மேடை - உன்றன் கொடும்பகைவன் யார்? சொல்லவா, நான் - கோடை வாடிப்போ கும்பிள்ளைப் பயிரும் - இனிc வார்க்கின்ற நீர்ப்பாலால் வளரும்; உயரும்! புதுவெள்ளப் பெருக்குக்கு நன்றி - உன்னால் புதுஇன்பம் காண்கின்றேன் கவலை யின்றி மதுஉள்ளம் கவின்காணும் நேரம் - என்றன் மனம்ஊறும் பாட்டாறும் உனையே சேரும்! - 1961 மதுரைத் தியாகராசர் கல்லூரி விடுதியிலிருந்து வைகையில் வெள்ளம் வரப் பார்த்து எழுதியது 62 0 மீரா கவிதைகள்