பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைப்பிறவி! நித்திரை யின்றி உணவுமின்றி - மன நிம்மதி யின்றிப் பொலிவிழந்து - துயர்ச் சித்திரம் போலப் படுக்கையிலே - அவள் சேர்ந்திருக்க - முகம் சோர்ந்திருக்கக் கண்டு பத்தரை மாற்றுப் பசும்பொன்னின் - உடல் பற்றிய நோயினைப் போக்கிடவே - ஒரு வைத்திய னாய்நான் பிறந்தேனா? - அவள் வாச மலர்க்கை பிடித்தேனா? ஆதிரை போலவே கண்ணழகும் இடை அசையும் அழகும் நடையழகும் கொண்ட மாதிடம் சென்று நெருங்கிநின்றே - உன்றன் மனத்துக் கவலை மடிந்துவிடும் அடி நீ, திட மாயிரு உன்கனவு - இனி நிச்சயம் வென்றிடும் என்றிடவே ஒரு சோதிட னாய்நான் பிறந்தேனா? - அவள் சுந்தரப் பொற்கை பிடித்தேனா? 76 0 மீரா கவிதைகள்