பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலிசை ஒருநாள் கேட்கவில்லை . எனில் குளிர்செவி யிரண்டும் எரிவதில்லை; மயில்நட மொருநாள் பார்க்கவில்லை . எனில் மணிவிழி யிரண்டும் அழுவதில்லை; பயின்றிட ஒருநாள் செல்லவில்லை - எனில் படிப்பே அத்துடன் முடிவதில்லை; உயிரே உனைத்தினம் தழுவவில்லை . எனில் உலகே எனக்கு முடிவதுமேன்? 'தமிழ்நாடு’ 13-5-62 மீரா கவிதைகள் 0 83